Monday 22 October 2018

பள்ளிகளில் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் தொழில்நுட்பம்

பள்ளிகளில் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் தொழில்நுட்பம்

மத்திய அரசால் உருவாக்கப்பட்ட “பள்ளிகளில் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் தொழில்நுட்பம்” எனும் திட்டம் டிசம்பர் 2004ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பம் குறித்த அறிவினை, திறமையினை வளர்த்துக்கொள்வதும், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் மேல்நிலை கல்விக்கு உதவும் செயல் வகைவழிகளைத் தெரிந்துக் கொள்வதும்தான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மாணவர்களிடையே உள்ள சமூக, பொருளாதார மற்றும் புவியியல் ரீதியான வேறுபாடுகளை நீக்கி, அவர்களை அறிவுபூர்வமாக ஒன்றிணைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புரட்சிகரமான திட்டமாக இது விளங்குகிறது. மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குப் பலன் தரும் வகையில் கணினி ஆய்வுக் கூடங்கள் அமைத்துக்கொள்ள இத்திட்டம் உதவுகிறது. கேந்திரிய வித்யாலயாவிலும், நவோதயா வித்யாவிலும் புத்தி கூர்மையுடன் கூடிய புத்தொளிர் (SMART) பள்ளிகளை உருவாக்கி அவைகளைத் தொழில்நட்ப மாதிரிகளாக செயல்பட வைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாக அமைந்துள்ளது. மேலும் இதன் மூலமாக அருகிலுள்ள ஏனைய பள்ளிகளுக்கும் தகவல் மற்றும் தொடர்புத் தொழில்நுட்பத் திறமைகளை பரவச்செய்வதும் இத்திட்டத்தின் இலக்காகும்.
இத்திட்டம் தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. கணினி மற்றும் கணினி சார்ந்த பொருட்கள், கல்விசார் மென்பொருள் ஆசிரியர் பயிற்சி மற்றும் இணையதள தொடர்பு போன்றவற்றிற்கான உதவியையும் ஆதரவினையும் தருகிறது.
மாநில மற்றும் பிற நிறுவனங்களுக்கான நிதி உதவி, திட்ட மேற்பார்வை மற்றும் மதிப்பீடு குழுவின் (Project Monitoring and Evaluation group – PM & EG) பரிந்துரை மற்றும் அங்கீகாரத்தின்படி அளிக்கப்படுகிறது. பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிதல் துறையின் செயலர், திட்ட மேற்பார்வை மற்றும் மதிப்பீடுக்குழுவின் தலைவராகச் செயல்படுகிறார்.

இன்றியமையாத புரட்சி

தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பமானது (ICT) சமூக மாற்றத்திற்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் தேவையான ஒரு இன்றியமையாத புரட்சி என்பதை உலகமே ஒப்புக் கொண்டுள்ளது. இருப்பினும் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தின் தயார் நிலையையும் உபயோகமும், உற்பத்தியில் முரண்பாட்டினை ஏற்படுத்தலாம். அது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கவோ மாற்றவோ கூடும்.
சமுதாய மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக முயற்சி செய்கின்ற, போராடுகின்ற நாடுகளுக்குத் தகவல் மற்றும் தொழில் நுட்பத்தைப் புரிந்து கொள்ளுதலும் இயக்குதலும் சிரமமானதொன்றாகும்.
தகவல் மற்றும் தொழில்நுட்ப உபயோகத்தில் இந்தியா மிகப்பெரிய புவியியல் மற்றும் மக்கள் தொகையில் முரண்பாடுகளையுடையதாக இருக்காது. மேலும் இந்திய நாடு உலகின் மிகப்பெரிய தகவல் மற்றும் தொழில்நுட்பச் செயலாற்றல் உடையது. தொழில்நுட்பங்கள் அதிகமுள்ள பெங்களுரு, குர்கான் அல்லது அதிக வருமானமுடைய, வளமுடைய நகரங்களில் தகவல் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது. ஆனால் இந்திய நாட்டின் பல இடங்களில் தொலைபேசி தொடர்பு கூட இல்லை.

தேசிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் மேம்பாட்டு குழு

ஜுலை 1998 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இத்துறை, (தகவல் தொழில்நுட்பத் துறை) பள்ளிகள் உட்பட அனைத்துக் கல்லூரி நிறுவனங்களிலும் தகவல் தொடர்பு குறித்த அறிமுகம் அவசியம் என்றுரைத்திருக்கிறது. அது தொடர்பான பத்திகள் பின்வருமாறு.
கணினி சொந்தமாக வாங்க எண்ணும் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளுக்கு உதவியாக கவர்ச்சிகரமான நிதி உதவிகளை அளிக்கும் வித்யார்த்தி கணினி திட்டம், சிஷ்யாக் கணினி திட்டம் மற்றும் பள்ளி கணினி திட்டம் போன்ற திட்டங்கள் தொடங்கப்பட்டன.
இத்திட்டங்கள் வெற்றி பெற ஒன்றோடு ஒன்றிணைந்த பல தொடக்க நிலை முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவை, கணினியின் விலையைக் குறைத்தல், சுலபத் தவணையில் கணினி வாங்க வங்கிக்கடன் தருதல், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் வேறுபல நிறுவனங்கள் நன்கொடையாகத் தரக்கூடிய கணினிகள், அயல்நாடு வாழ் இந்தியர்களின் (NRI) நிறுவனங்கள் அதிக அளவில் தரும் கணினி நன்கொடைகள், மொத்தமாக வாங்கும்போது விலைக்குறைப்பு போன்றனவாம்.
தகவல் தொழில்நுட்பத்தின் தேவையையும் முக்கியத்துவத்தையும் கற்பிப்பது மட்டும் புத்தொளிர் (SMART) பள்ளிகளின் பங்கில்லை. இனிவரும் மில்லேனியம் ஆண்டில் தகவல் தொழில்நுட்பத் துறையின் திறனையும் மதிப்பையும் வெளிப்படுத்தி, ஓரு முன் மாதிரியான பள்ளியாகக் கல்வி நிறுவனமாக அனைத்து மாநிலங்களிலும் விளங்கவேண்டும் என்பது அரசின் நோக்கமாக அமைந்துள்ளது.

குறிக்கோள்கள்

  • தகவல் மற்றும் தொடர்புத் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை கிராமப்புறங்களில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளுக்கு எடுத்துரைத்து விளக்குதல்; அக்கல்வி அவர்களைச் சென்றடைய வழிவகுத்தல்.
  • இணைய தளத்தின் பயன்பாட்டை அதிகரித்தல், தகவல் மற்றும் தொடர்புத் தொழில்நுட்பத்தின் தேவையையும் சேவையையும் கூடுதலாக்குதல்.
  • தனியார் துறையிலும் (STET) சரியான அமைப்புத் திட்டத்தின் மூலம் ஆன்லைனின் (online) தரத்தை அதிகரித்து அதன் பயன்பாட்டைப் பெருக்குதல்.
  • இன்றைய கணினி உலகில் உயர்தர படிப்புக்கும், அதிக ஊதியமுடைய வேலைக்குச் செல்லத் தேவையான, திறமைகளை, வாய்ப்புகளை மாணவர்க்கு ஏற்படுத்தித் தருதல்.
  • சிறப்புத் தேவை அல்லது அதிகத் தேவையுடைய மாணவ மாணவியருக்கு சிறந்த கல்வியை தகவல் மற்றும் தொழில்நுட்பம் மூலம் தருதல்.
  • மாணவர்களுக்குச் சிறப்பான, பகுத்தறியக்கூடிய திறனை சுயமாக படித்துணரும்படிக் கூறுதல். இப்பயிற்சி வகுப்பறைச் சூழலை மாற்றி, ஆசிரியரைக் கருத்தில் அல்லது மையமாக வைத்துப் பாடங்கள் நடத்தப்படாமல், மாணவர்களை மையமாக அல்லது கருத்தில்கொண்டு நடத்தப்படும்.
  • தகவல் மாற்றும் தொடர்புத் தொழில்நுட்பக் கருவிகளின் பயன்பாட்டை தொலைதூரக் கல்வியில் அதிகரிப்பதுடன் பார்க்கவும் கேட்கவும் கூடிய கருவிகளையும் செயற்கைக் கோள்களை அடிப்படையாகக் கொண்ட கருவிகளையும் பயன்படுத்துதல்.

No comments:

Post a Comment