Monday 22 October 2018

கற்பித்தலில் உள்ள தொழில்நுட்ப கருவிகள்

தகவல் தொடர்பு நுட்பங்கள் (ICT) என்றால் என்ன?

வெவ்வேறு வகையான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தகவல்களை மின்னணுத்தொடர்பு மூலம் பிறருக்கு அணுப்புதல், சேமித்தல், புதிதாக உருவாக்குதல், வெளிப்படுத்துதல், பரிமாறிக் கொள்ளுதலே - தகவல் தொடர்பு நுட்பம் என்பதாகும். இந்த நுட்பத்தில் வானொலி, தொலைக்காட்சி, படக்காட்சி, டி.வி.டி., தொலைபேசி, (தொலைபேசி,  மொபைல்) செயற்கைக் கோள், கணிணி மற்றும் அதைச் சார்ந்த மென்பொருட்கள் ஆகிய  அனைத்தும் அடங்கும். மேலும், படக்காட்சி மூலம் கலந்தாய்வு, இமெயில், பிலாக்ஸ் உள்ளிட்ட கருவிகள், சேவைகளும் இதில் அடங்கும்.
தகவல் பரிமாற்ற காலத்திற்கு தகுந்தார்போல் கல்வியை வழங்க, நவீன தகவல் தொடர்பு நுட்பங்களை பயன்படுத்துவது அவசியம்.  இதற்கு கல்வியாளர்கள், முதல்வர்கள், ஆசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் தொழில் நுணுக்கங்கள், பயிற்சி, நிதி, கட்டிமானத் தேவைகள் போன்றவற்றில் சரியான முடிவுகளை எடுக்கவேண்டும். புது மொழியை கற்றுக் கொள்வதைவிட, புதுமொழியில் கற்பிப்பது போன்று, இது பலருக்கு சிரமமான பணிதான்.
இந்த பகுதியில், நாடுகளை இணைக்கும் செயற்கைக் கோள்கள் முதல் வகுப்பறையில் மாணவர்கள் பயன்படுத்தும் கணிணி வரையிலான இயந்திரங்களை நாம் பார்க்கப் போகிறோம். கல்வியாளர்கள், கொள்கை முடிவெடுப்போர், பாடதிட்டம் வகுப்போர், போன்ற பலருக்கு இவை பயன்படும் என்று கருதுகிறோம்.

கல்வியில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் பங்கு

பொதுவாக, கல்வியில் தகவல் தொடர்பின் முக்கியத்துவத்துவத்தை அனைவரும் அறிவர். ஆனால், தகவல் தொடர்பு நுட்பத்தின் குறிப்பிட்ட பங்கு  மற்றும் அதன் முழுமையான பலனை பெருதல் குறித்தே விவாதங்கள் நடந்து வருகின்றன.
பயன்படும் தொழில்நுட்பங்கள்
உலகளவில் தொழில் நுட்ப பயன்பாட்டின் அனுபவங்களைப் பார்க்கும் போது,  பெரும்பாலும் அவை கீழ்கண்ட தலைப்புகளுள் அடங்கும்
  • பல்வேறு ஊடகங்கள் மூலம் கற்றல்
  • கல்வித்தொலைக்காட்சி
  • கல்வி வானொலி
  • இணையதளம் மூலம் ஆலோசனை வழங்குதல்
  • நூலகங்கள் மூலம் ஆராய்தல்
  • அறிவியல் தொழில்நுட்பத்தில் செயல்முறைகள்
  • ஊடகங்களின் பயன்பாடு
  • இளம் குழந்தை வளர்ச்சி,  குறைந்தளவு மக்கள்தொகை உள்ள இடங்களில் கல்வி, முதியோர் கல்வி, பெண்கல்வி, வேலைத்திறனை அதிகரித்தல் ஆகிய பகுதிகளில் தகவல் தொடர்பு நுட்பங்கள் குறிப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
  • ஆசிரியர்களை தயார் செய்யவும்,  அவர்களது பணிக் காலத்தில் பயிற்சி அளிப்பதற்கான நுட்பங்கள்.
  • கொள்கைளைத் திட்டமிடல், உருவாக்குதல், புள்ளி விவரங்கள் பராமரித்தலுக்கான நுட்பங்கள்.
  • பள்ளிகள் பராமரிக்கத் தேவையான நுட்பங்கள்.
இன்றைய நுட்பங்கள்
கல்வி கற்றலுக்கு பயன்படும் நுட்பங்கள் குறித்த ஆய்வில், கீழ்கண்ட நுட்பங்கள் அடங்கும்
  • கற்பிக்கும் உபகரணங்கள்
  • ஆடியோ, வீடியோ மற்றும் இணைய வடிவிளான கருவிகள்
  • மென்பொருள், பொருளடக்கம்
  • இணைக்கும் முறைகள்
  • ஊடகம்
  • கல்வி சம்பந்தப்பட்ட இணையதளங்கள்.
நாளைய நுட்பங்கள்
முடிவெடுப்போர், பயன்படுத்துவோரின் எண்ணங்களுக்கேற்ப, எதிர்காலத்தை கவனத்தில்கொண்டு - என்ன இருக்கிறது என்பது மட்டுமல்ல, என்னவரும் என்பதை எதிர்நோக்கியும் புதிய, தேவையான தொழில்நுட்பங்கள் பற்றி சுருக்கமாக இப்பகுதியில் பார்க்கலாம்.
வானொலியும் தொலைக்காட்சியும்
20ம் நூற்றாண்டின் தொடக்ககாலத்திலிருந்தே கல்வித் துறையில் வானொலியும் தொலைக்காட்சியும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த தகவல் தொடர்பு சாதனங்கள் மூன்று வழிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
  • நேரடியாக பாடம் எடுத்தல் - வானொலி மூலம் கற்பித்தல் கலந்தாய்வுசெய்தல், தொலைக்காட்சியிலும் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுதல்
  • பள்ளிக்கல்வி ஒலிபரப்பு - வேறுவிதமான பயிற்றுவிக்கும் வாய்ப்புகள் கிடைக்காத பட்சத்தில் வானொலிக்கல்வி ஒலிபரப்பு பயிற்றுவித்தலுக்கு உதவிகரமாக இருக்கிறது.
  • பொதுவான கல்வித்திட்டங்கள்/நிகழ்ச்சிகள் - இவை அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் கல்வியை வழங்கி வருகிறது.
வானொலி மூலம் கற்பித்தல் மற்றும் கலந்தாய்வு செய்தலில்,  தினமும் வகுப்பறையில் பாடங்கள் ஒலிபரப்பப்படுகின்றன. குறிப்பிட்ட தலைப்பிலான வானொலிப்பாடங்கள், பிரத்யேக பிரிவினருக்காக, ஒரு குறிப்பிட்ட அளவில், தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது. இது ஆசிரியருக்கு உதவிகரமாக இருக்கும். பயிற்றுவிக்கும் முறையை மேம்படுத்தும். கல்வி கற்கும் திறன் இதன் மூலம் அதிகரிக்கும். இம்முறையால், கல்வி கற்கும் வாய்ப்பு மற்றும் தரம் மேம்படுவதாக ஆராய்ச்சி தெரிவிக்கின்றன. அதிக எண்ணிக்கையிளான மக்களுக்கு, பாடங்களை எடுத்துச் செல்ல, இம்முறை சிறந்த மற்றும் குறைந்த செலவிலான முறையாகும்.
தொலைக்காட்சி பாடங்கள், மற்ற கற்பிக்கும் முறைகளுக்கு உதவிகரமாகவோ அல்லது தனிப்பட்ட கற்பிக்கும் முறையாகவோ பயன்படும்.  தொலைக்காட்சி பாடங்களில், தற்போது ஆசிரியர் பேசுவது மட்டுமின்றி, நேயர்களுடன் உரையாடுவது, அவர்களை நிகழ்ச்சியுடன் ஒருங்கிணைப்பது போன்ற பணிகள் செய்யப்படுகின்றன.  தெலைக்காட்சி கல்வி ஒலி/ ஒளிபரப்பில், பாடங்களின் தொகுப்பும், மற்றவைகளும் சேர்க்கப்பட்டு, கல்வி கற்றல் பணி எளிமையாக்கப்படுகிறது.
கல்வி ஒளிபரப்பு, ஆசியா-பசிபிக் பகுதிகளில் பெருமளவு பரவியுள்ளது. உதராணத்திற்கு, இந்தியாவில், இந்திரா காந்தி திறந்தநிலை பல்கழைக்கழகம் தொடர்ந்து கல்வி ஒலி- ஒளிபரப்புகளை செய்து வருகிறது.
பாடத்திட்டத்தில் உள்ள குறிப்பிட்ட பாடங்களை ஒலிபரப்புவது மட்டுமல்லாமல், பொதுவான கல்வி, வாழ்க்கைக்கு தேவையான பல நிகழ்ச்சிகளை வழங்குவது வானொலிக்கு முக்கிய பணியாக உள்ளது.  அடிப்படையில் வானொலி அல்லது தொலைக்காட்சியில் ஒலி/ஒளிபரப்பாகும் எந்த நிகழ்ச்சியுமே பொதுவான கல்வி நிகழ்ச்சியாக எடுத்துக் கொள்ளலாம்.

வானொலி, தொலைக்காட்சி - கல்விக்கு எப்படி உதவிகரமாக இருக்கின்றன?

கல்வி கற்பித்தல் பணிக்கு வானொலி 1920ல் இருந்தும், தொலைக்காட்சி 1950ல் இருந்தும் உறுதுணை புரிந்து வருகின்றன. கல்வியில் இந்த ஊடகங்களின் பயன்பாடு, மூன்று முறைகளில் பின்பற்றப்படுகின்றன.
  • நேரடியாக பாடங்களை ஒலிபரப்பு செய்தல் - இம்முறை, தற்காலிகமாக, ஆசிரியர்கள் இல்லாத போது, மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க உதவுகிறது.
  • பள்ளிக்கல்வி - (கல்வி ஒலிபரப்பு) - இது பாடம் நடத்தும் ஆசிரியருக்கு உறுதுணையாக இருக்கிறது. மேலும் கல்வி கற்கும் உபகரணங்கள் வேறு இல்லாத போது இம்முறை பயன்படும்
  • சமூகம், நாடு, உலகம் தழுவிய பொதுவான கல்வி நிகழ்ச்சிகள், பொதுவான மற்றும் முறைசாரா கல்வி வசதிகளை வழங்குகிறது.
நேரடி பாடம் நடத்துதலுக்கு, வானொலி மூலம் பள்ளிக்கல்வி பாடங்கள் பெரிதும் உதவுகிறது.  இதில், கணிதம், அறிவியல், சுகாதாரம், மொழிகள் ஆகிய பாடங்களில், மாநில மற்றும் தேசிய அளவிலான பாடத்திட்டங்களில் வானொலிப்பாடங்கள் தயார் செய்யப்பட்டு வகுப்பறையில்  தினமும் 20-30நிமிடம்  ஒலிபரப்பு செய்யப்படுகிறது. இது பள்ளியில் பாடங்கள் எடுக்கும் தரத்தை மேம்படுத்த உதவும்.
மேலும் முறையான பயிற்சி பெறாத ஆசிரியர்களுக்கும், வசதி வாய்ப்பு குறைவாக உள்ள பள்ளிகளுக்கும் பேருதவியாக இருக்கும். வானொலிப்பாடங்கள் இந்தியா மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது முதலில் 1980ல் தாய்லாந்து நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1990களில் இந்தோனேசியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேப்பால் ஆகிய நாடுகளில் கொண்டுரவப்பட்டது.  இம்முறை மற்ற தொலை தூரக்கல்வி முறைகளிலிருந்து எப்படி மாறுபட்டது என்றால், இம்முறையின் முக்கிய நோக்கம்,  அனைவருக்கும் கல்வி அளிப்பதைத் தாண்டி,   தரமான கல்வி கற்பித்தலே ஆகும். இதனால் இம்முறை, முறையான கல்வி மற்றும் முறைசாரக்கல்வி அளிப்பதில், பெரும் வெற்றி பெற்றுள்ளது.  உலகளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இத்திட்டம் கல்வி அறிவு பெறுதல், அனைவருக்கும் சமமான கல்வி அளித்தலில் பெரும் முன்னேற்றம் பெற உதவிபுரிந்துள்ளது என கண்டு பிடித்துள்ளனர். மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது இத்திட்டத்திற்கு ஆகும் செலவும் மிகக்குறைவே.
ஓரிடத்தில் தயாரிக்கப்பட்ட தொலைக்கல்வி நிகழ்ச்சிகள் செயற்கைகோள் மூலம் குறிப்பிட்ட நேரத்தில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு ஒளிபரப்பப்படுகிறது. இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. ஒவ்வொரு மணி நேரத்திலும் வெவ்வெறு பாடங்கள் விளக்கப்படுகின்றன. மாணவர்கள் இதன்மூலம் பல ஆசிரியர்களின் பாடங்களை கேட்டு விளக்கம் பெறுகின்றனர்.  தேவையான விளக்கம் அளிக்க வகுப்பறைகளில், அனைத்து பாடங்களுக்கும் ஒரே ஆசிரியர் இருப்பார்.
இம்முறை மூலம் பாடங்களை வழங்குதலில், பல ஆண்டுகளில், நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. நிபுணர் பேசுவது மட்டுமில்லாமல், ஒருவருக்கொருவர் கருத்து பரிமாறிக் கொள்ளுதல், நேயர்களை நிகழ்ச்சியோடு ஒருங்கிணைத்தல் ஆகிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களின்போது, சமூக பிரச்சனைகளை நிகழ்ச்சிகளில் கொண்டுவருவது, அதற்கு தீர்வு காண்பது, குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த  கல்வி வழங்குவது, பல்வேறு நிறுவனங்களோடு சமூகத்தை இணைப்பது, பள்ளிக் கூடங்களை நன்முறையில் பராமரித்தல் ஆகியவை சேர்க்கப் படுகின்றன. இதனால் மாணவர்களும் தங்களை சமூகப்பணியில் ஈடுபடுத்திக் கொள்கின்றனர். தொலைக்காட்சி கல்வி நிகழ்ச்சிகளின் மூலம் சமூகத்தில் வரவேற்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பள்ளிகளில் மாணவர்களின் தேர்வுத்திறன் அதிகரித்துள்ளது. ஆசியாவில், இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் உட்பட, சைனாவில் 44 வானொலி, தொலைக்காட்சி பல்கலைக்கழங்கள், இந்தோனேசியாவில் டெர்புகா பல்கலைக் கழகம், போன்றவை, அதிக மக்களை அடைவதற்காக இம்முறையை பயன்படுத்தியுள்ளன.  இந்த நிறுவனங்கள் ஒளிபரப்போடு புத்தகங்கள், ஒலி நாடாக்களையும் சேர்த்து வழங்குகின்றன.
இம்முறைகள் அனைத்தும் வகுப்பறை ஆசிரியருக்கு மாற்றாக இருக்க முடியாது. மாறாக, பள்ளிக்கல்வி முறையை நன்முறையில் செயல்படுத்த உறுதுணையாக இருக்கும். ஆசிரியர்கள் ஒலிபரப்பு பொருட்களை தங்கள் பாடத்திட்டத்தில் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  வளர்ந்துவரும் நாடுகளில் பள்ளிக்கல்வி ஒலிபரப்பு, மத்திய கல்வி மற்றும் தகவல் ஒலிபரப்பு அமைச்சகங்களால் சேர்ந்து செய்யப்படும் ஒரு பணியாக இருக்கிறது.
பொதுவான கல்வி நிகழ்ச்சிகளில் - செய்திகள். நிகழ்வுகள், வினா விடை, உரைச்சித்திரம், கல்வி சம்பந்தப்பட்ட படக் காட்சிகள் இடம்பெறுகின்றன.  இவை முறைசாராக்கல்வி வாய்ப்புகளை நேயர்களுக்கு வழங்குகின்றன.

கற்பித்தல் பணியை கற்பவர்கள் மையமாக மாற்றுவதில் தகவல் தொடர்பு நுட்பத்தின் பங்கு என்ன?

21ம் நூற்றாண்டில் கல்வித்துறை மாற்றத்தில், தகவல் தொடர்பு திட்டம் பேருதவி புரிந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இத்திட்டம் முறையாக செயல்படுத்தபடுமேயானால், வாழ்நாள் முழுக்க பயன்படும்  கல்வி அறிவு மற்றும் திறமையை மாணவர்கள் எளிதாக பெற இயலும்.
தகவல் தொடர்பு நுட்பம், குறிப்பாக, கணிணி மற்றும் இணையதளம் முறையாகப் பயன்படுத்தப்பட்டால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவரும் பயன்பெரும் வாய்ப்பு உள்ளது.
இந்தப் புதிய முறை பாடம் கற்பித்தலில், ஆசிரியர்கள் மாணவர்களை மையப்படுத்தி கற்பிக்க வழிவகுக்கிறது.
ஆர்வத்துடன் பயிலுதல்: தகவல் தொடர்பு தொழில் நுட்ப பயன்பாட்டின் மூலம், பல புதிய முறைகளில் தகவலை பயன்படுத்த மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. மணப்பாடம் செய்து படிப்பதைக் காட்டிலும், வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்ளுதல், கற்றலை எளிமையாக்குதல், கற்போரின் வாழ்க்கை சூழ்நிலைக்கு ஏற்ப கல்வி அமைதல் ஆகியவை சாத்தியமாகும்.
கூட்டாக பயிலுதல் : தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பயிலுதல் முறையானது, மாணவர்கள், ஆசிரியர்கள், வல்லுநர்களிடையே அவர்களுடைய இடம், தகுதியை கணிக்காமல் கலந்துரையாட ஊக்குவிக்கின்றது. பலவிதமான கலாச்சார பிரிவினரிடையே பழகுவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறது. இதன் மூலம் கற்போருடையே ஒருமித்த கருத்தும், தகவல் பரிமாரிக் கொள்ளும் திறனும் அதிகமாக உதவி செய்கிறோம். மேலும் கல்வி பயிலுதல் ஒரு காலகட்டத்திற்கு மட்டும் என்றில்லாமல், வாழும் காலம் முழுக்க தொடர்பணியாக மேற்கொள்ளப்படுகிறது.

தகவல் தொடர்பு தொழில் நுட்பம் பயிலுதலை உண்மையிலேயே அதிகப்படுத்தி உள்ளதா?

தகவல் தொடர்பு நுட்பத்தினால் கல்வியில் தாக்கம் ஏற்படுவது, அது எப்படி பயன்படுத்தப்படுகிறது, எதற்காக பயன்படுத்தப்படுகிறது, என்பதைப் பொறுத்து அமையும். மற்ற கல்வி கற்கும் சாதனங்கள், கருவிகள், மாதிரிகளைப் போல, தகவல் தொடர்பு நுட்பம் எல்லாருக்கும், எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி செயல்படுவதில்லை.
கல்வி பயிலுதலை சாத்தியமாக்குதல்:
தகவல் தொடர்பு நுட்பம், அடிப்படை கல்வி பயிலுதலை  எவ்வளவு அதிகப்படுத்தியுள்ளது என்பதை கணித்தல் கடினமாகும். ஏனென்றால் இதற்காக நடத்தப்பட்ட ஆய்வுப்பணி சிறிய அளவிலானது. முழுமையாகவும் அது பற்றி கருத்து தெரிவிக்கப்படவில்லை. தொடக்கப் பள்ளி அளவில் தகவல் தொடர்பு நுட்பம் கடைபிடிக்கப்பட்ட மாதிரிகளும் இல்லை.
உயர் கல்வி மற்றும் பெரியோர் கல்வியில், பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாதவர்களுக்கு தகவல் தொடர்பு நுட்பங்கள் மூலம் கல்வி பயில வாய்ப்பு கிடைத்தது ஓரளவிற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகம் போன்ற  பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் பதிவு செய்வதை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இது விளங்கும்.
தரம் உயர்த்துதல்:
வானொலி, தொலைக்காட்சி மூலம் கல்வி ஒளிபரப்பின் தாக்கம் குறித்த முழுமையான ஆய்வு நடத்தப்படவில்லை என்றாலும், சிறிதளவு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளின் படி, சாதாரண பள்ளிக்கூடகல்வி முறையோடு இம்முறை ஒத்திருப்பதாக தெரிய வருகிறது. இம்முறையால் மாணாக்கர்களின் மதிப்பெண்களும், அவர்கள் பள்ளிக்கு வருகின்ற நாட்களும் உயர்ந்திருப்பதாக தெரிகிறது.
மாறாக, கணிணிப் பயன்பாடு, இணையதள மற்றும் அது தொடர்பான நுட்பங்களின் பயன்பாட்டால், பயிலுதலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று கருதப்படுகிறது. ஆனால், இது பற்றி கருத்து பேதங்களும் நிலவுகிறது.
கணிணியின் பயன்பாட்டால், இருக்கக்கூடிய பாடத்திட்டத்தின் பயன்பாட்டளவு உயர்ந்துள்ளதாக பல ஆய்வுகள் கூறுகின்றன.  குறிப்பாக, கணிணி, ஒரு ஆசிரியராக இருந்து, எப்போதும் பயன்படுவதால், பாடங்களில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற உதவி புரிந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. மாணவர்களும் விரைவாக கல்வி பயிலுகின்றனர். கற்கும் திறன் அதிகமாகின்றது. மாணவர்கள் கணிணியை பயன்படுத்தும்போது, அதிகமாக படிக்கத் தூாண்டுதல் ஏற்படுகின்றது. இவ்வளவு முடிவுகள் தெரிவிக்கப்பட்டாலும் இதிலும் சில குறைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கணிணி பயன்பாடு, இணையதளம், அது சார்ந்த நுட்பங்கள், ஆசிரியர் பயிற்சியும், படிப்பதற்கு உகந்த சூழலை உருவாக்கவும், உதவி செய்கிறதாம்.  இந்த ஆய்வுகள் அனைத்தும், விமர்சனத்திற்கு உட்பட்டவை. இதில் குறைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சரியான புள்ளி விபரங்கள் இல்லாததே குறையாகும். மாணவர்கள் ஆசிரியர்களுக்கிடையே கருத்துப் பரிமாற்றம், கல்வி கற்றலில் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டு வரும் என கூறுப்படுகிறது.

கணிணி மற்றும் இணைய தளங்களின் பயன்பாட்டை கணிப்பதில் உள்ள ஒரு பிரச்சனை, கற்போரை மையமாக வைக்கும் கல்வி  சூழலை பரிசோதிக்க, தற்போது நடைமுறையில் இருக்கும் அளவீடுகளால் முடியாது. அத்துடன் கற்கும் முறையோடு, தொழில்நுட்ப பயன்பாடும், ஒருங்கிணைந்து வருவதால், எந்த நுட்பம் சரியானது என்பதை கண்டுபிடிப்பதும் கடினம். கற்றலில் ஏற்படும் மாற்றத்திற்கு, நுட்பங்கள்தான் காரணம் என்பதையும் முடிவு செய்ய இயலாது.

No comments:

Post a Comment