Monday 22 October 2018

ராஸ்ட்ரிய மத்யாமிக் சிக்ஸா அபியான்

ராஸ்ட்ரிய மத்யாமிக் சிக்ஸா அபியான் திட்டம்

எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான உயர்நிலைக் கல்வியை விரிவுபடுத்துவதையும் அதன் தரத்தை உயர்த்துவதையும் ராஸ்ட்ரிய மத்யாமிக் சிக்ஸா அபியான் திட்டம் (RSMA) நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சுமார் 5 கி. மீட்டருக்குள் உயர்நிலைக் கல்வியை (பத்தாம் வகுப்பு வரை) கொண்டு செல்ல உள்ளது. மத்திய அரசின் இந்த மிக சமீபத்திய திட்டம் அனைவருக்கும் உயர்நிலைக்கல்வி (USE) என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது லட்சக்கணக்கான குழந்தைகள் ஆரம்பக்கல்வி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட சர்வ சிக்ஸா அபியான் திட்டம் பெருமளவு வெற்றி பெற்றுள்ளது. இதனால் நாடுமுழுவதும் உயர்நிலைக் கல்விக்கான கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இதனைக் கருத்தில் கொண்டு உயர்நிலைக்கல்விக்கான திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. 11 ஆவது ஐந்தாண்டு திட்டகாலத்தில் ராஸ்ட்ரிய மத்யாமிக் சிக்ஸா அபியான் (RMSA) திட்டம் ரூ. 20,120 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது. "சர்வ சிக்ஸா அபியான் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டதன் விளைவாக அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் ஆரம்பக் கல்வியை முடித்து உயர்நிலைக்கல்வி பெற தயாராய் உள்ளனர் " என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

கண்ணோட்டம்

14 முதல் 18 வயதுடைய அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியை எளியவழியில் குறைந்த செலவில் அளிப்பதை உயர்நிலைக் கல்வி நோக்கமாகக் கொண்டுள்ளது. அனைவருக்கும் உயர்நிலைக்கல்வி என்பதை நோக்கமாகக் கொண்டு பின்வருபவை எட்டப்படவேண்டும் :
  • எந்தவகை நிலப்பரப்பானாலும் குறிப்பிட்ட தூரத்திற்குள் ஒரு உயர்நிலைப்பள்ளி உருவாக்கப்பட வேண்டும். அதாவது 5 கி.மீக்குள் ஒரு உயர்நிலைப்பள்ளியும் 7-10 கி.மீக்குள் மேல்நிலைப் பள்ளி ஏற்படுத்தவேண்டும்.
  • 2017 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் உயர்நிலைக்கல்வி என்ற நிலை எட்டப்படவேண்டும் (வருகைப்பதிவு 100%)
  • 2020 ஆம் ஆண்டிற்குள் பள்ளியில் சேர்ந்து அனைவரையும் இடையில் விலகிவிடாமல் தொடர்ந்து தக்கவைத்தல்.
  • பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர்,கல்வியில் பின்தங்கியவர்கள், பெண்கள்,ஊனமுற்ற குழந்தைகள்,கிராமப்புறத்தில் வசிப்போர் மற்றும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி & சிறுபான்மையினர் உள்ளிட்ட பின்தங்கிய மக்களும் உயர்கல்வி அளிப்பதில் சிறப்பு கவனம செலுத்துதல்.

நோக்கம் & குறிக்கோள்

அனைவருக்கும் உயர்நிலைக்கல்வி (USE) என்பதை அடைய வேண்டுமெனில் உயர்கல்வி பற்றி முற்றிலும் புதிய கருத்து அமைப்பு உருவாக்குதல் அவசியம். வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு. அனைவருக்கும் சென்றடைதல், சமத்தன்மை. சமூகநீதி, தற்காலத்தில் உள்ள பொருத்தம், மேம்பாடு, பாடத்திட்டம் மற்றும் அமைப்பு முறை. அனைவருக்கும் உயர்நிலைக்கல்வி என்பது சமூகத்தில் சமத்தன்மையை எட்ட வாய்ப்பாக அமைகிறது. 'பொதுவான பள்ளி’ என்ற கருத்து ஊக்குவிக்கப்பட வேண்டும். இந்த நெறிமுறைகள் பின்பற்றப்படுமேயானால் தனியார் பள்ளிகளும் நலிவடைந்தோர் & வறுமைக்கோட்டிற்கும் கீழே வாழும் குழந்தைகளையும் சேர்த்துக் கொண்டு அனைவருக்கும் உயர்நிலைக்கல்வி என்பதை அடைய உதவலாம்.
முக்கிய குறிக்கோள் :
  • அரசு/உள்ளாட்சி & அரசு உதவி பெறும் பள்ளிகளில் உரிய நிதி ஆதாரத்தினைக் கொண்டு அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியரகள் மற்றும் இதர வசதிகள் பரிந்துரைக்கப்பட்ட தரத்தில் ஏற்படுத்துதல். இதர பள்ளிகளில் அதற்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்குதல்.
  • பின்வரும் வழிமுறைகளின்படி பள்ளிகள் எளிதில் வந்து செல்லும் படி அமைக்கப்படவேண்டும். (5 கி.மீக்கும் ஒரு உயர்நிலைப்பள்ளியும் 7-10 கி.மீக்குள் மேல்நிலைப் பள்ளி, பாதுகாப்பான போக்குவரத்து வசதி, உள்ளூர் சூழ்நிலையைப் பொறுத்து திறந்த நிலைப் பள்ளிகள் ஏற்படுத்தல்). மலைப்பகுதிகளில் இந்த விதிமுறைகளில் சற்றே தளர்வு இருக்கலாம். அங்கு உறைவிடப்பள்ளிகள் அமைக்கலாம்.
  • பாலினம், சமூக-பொருளாதார வேறுபாடு, உடல் ஊனம் மற்றும் இதர பிற காரணங்களால் எந்த குழந்தையும் உயர்நிலைப்படிப்பை தவறவிட்டுவிடாமல் செய்தல்.
  • அறிவுசார், சமூக மற்றும் கலாசார ரீதியில் கற்றலை வளர்க்க தரமான உயர்கல்வி வழங்குதல்.
  • அனைத்து மாணவர்களும் தரமான கல்வியைப் பெறுவதை உறுதிபடுத்துதல்.
  • மேற்கண்ட குறிக்கோள்களை அடைந்துவிட்டால் நாம் சமச்சீர் கல்வியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம் எனக் கூறலாம்.
இரண்டாம் நிலையில் அணுகுமுறை மற்றும் உத்திகள்
அனைவருக்கும் உயர்நிலைக்கல்வி என்பதை அடிப்படையாகக் கொண்டால் கூடுதல் பள்ளிகள், கூடுதல் வகுப்பறைகள், கூடுதல் ஆசிரியர்கள் மற்றும் இதர கட்டமைப்புகளுக்காக அதிக அளவிலான உள்ளீடுகள் தேவைப்படுகின்றன. அப்போதுதான் நாம் அடைய நினைத்த எண்ணிக்கையிலான பள்ளிகள், அவற்றின் நம்பகத்தன்மை மற்றும் தரத்தை பெற முடியும். இவற்றுக்கு இணையாக கல்வி,உள்கட்டமைப்பு,மனிதவளம் வகுப்பறை உள்ளீடுகள் ஆகியவற்றின் தேவைகள் அறிதல் மற்றும் அவற்றை அளித்தல் முக்கியத்துவம் பெறுகிறது. திட்டத்தை செயல்படுத்துவதைக் கண்காணித்தலும் அவசியமே. முதற்கட்டமாக இத்திட்டம் 10 ஆம் வகுப்பு வரை செயல்படுத்தப்படும். இத்திட்டம் செயல்படுத்திய 2 ஆண்டுகளுக்குள் மேல்நிலைப் பள்ளிகள் இது விரிவுபடுத்தப்படும். அனைவருக்கும் உயர்நிலைக்கல்வி மற்றும் அவற்றின் தரத்தை உயர்த்துவதற்கான அணுகுமுறைகளும் மற்றும் உத்திகளும் பின்வருமாறு.

பெறும் வழி

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பள்ளி கல்வியில் மிகுந்த ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. தனியார் பள்ளிகளுக்கிடையேயும், தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கிடையேயும் மிகுந்த வேறுபாடு காணப்படுகின்றது அனைவருக்கும் தரமான உயர்நிலைக்கல்வி என்ற நோக்கத்தை எட்ட தேசிய அளவிலான சிறப்பாக இயற்றப்பட்ட நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.இந்த நெறிமுறைகள் பூகோள,சமூக-பொருளாதார, மொழி மற்றும் மக்கள்தொகை ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாநில/யூனியன் பிரதேசங்களுக்கும் ஏற்றபடி இருக்கும் வகையில் அமைய வேண்டும். தேவையிருப்பின் வட்டார அளவில் நெறிமுறைகளை வகுக்கலாம். இந்த வழிகாட்டு நெறிமுறைகள் கேந்த்ரிய வித்யாலயா பள்ளிகளுக்கு உள்ளவற்றைப் போல் இருக்க வேண்டும். அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் கற்றலுக்கான ஆதாரங்கள் பின்வரும் வழியில் பெருக்கப்படுகின்றன.
  • தற்போது உள்ள உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை விரிவுபடுத்துதல். இந்த பள்ளிகளில் ஷிப்ட் முறையைக் கையாளுதல்.
  • மைக்ரோ திட்ட வழிமுறைகளின்படி போதிய கட்டமைப்பு வசதி & ஆசிரியர்கள் கொண்டுள்ள நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இதற்கு ஆசிரமப் பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • தேவையின் அடிப்படையில் உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்
  • பள்ளி மேப்பிங் நெறிமுறைகளின்படி பள்ளிகளே இல்லாத பகுதிகளில் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்படும்.இப்பள்ளிகள் மழைநீர் சேகரிக்கும் அமைப்புடன் ஊனமுற்ற குழந்தைகளுக்கு ஏற்றபடி கட்டப்படும். ஏற்கனவே கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களில் புதிய மழைநீர் சேகரிக்கும் அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
  • ஏற்கனவே உள்ள பள்ளி கட்டிடங்கள் ஊனமுற்ற குழந்தைகளுக்கு ஏற்றபடி மாற்றப்படும்.
  • அரசு மற்றும் தனியார் இணைந்த பங்களிப்புடன் புதிய பள்ளிகள் ஏற்படுத்தப்படும்.
தரம்
  • கரும்பலகை,மேஜை,நாற்காலிகள், நூலகம்,கணிதம் & அறிவியல் ஆய்வுக்கூடம், கணிணி மையம் மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்ட தேவையான அடிப்படை வசதிகளை அளித்தல்.
  • கூடுதல் ஆசிரியர்களை நியமித்தல் மற்றும் பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி.
  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அவர்களின் கல்வித்திறனை அதிகரிக்க சிறப்பு பயிற்சி வகுப்புகள்.
  • 2005 ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய பாடத்திட்ட கொள்கையின் (NCF) அடிப்படையில் பள்ளி பாடத்திட்டங்கள் மறுஆய்வு செய்யப்பட வேண்டும்.
  • கிராமப்புறம் மற்றும் மலைப்பாங்கான இடங்களில் ஆசிரியர்களுக்கு இருப்பிடவசதி ஏற்படுத்திக் கொடுத்தல்.
  • பெண் ஆசிரியர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

சமச்சீர் தன்மை

  • தாழ்த்தப்பட்டோர்,பழங்குடியினர் இதர பிற்படுத்தபட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச உணவு/இருப்பிட வசதி.
  • விடுதிகள்/உறைவிடப் பள்ளிகள், ஊக்கத்தொகை, சீருடை ,புத்தகங்கள் மற்றும் மாணவிகளுக்கு தனி கழிப்பிடவசதி.
  • உயர்நிலை பள்ளி அளவில் நன்கு பயிலக்கூடிய/தேவையுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளித்தல்.
  • எல்லா செயல்பாடுகளும் சமச்சீர் கல்வியை அடிப்படையாக கொண்டுள்ளது. அனைத்துப் பள்ளிகளிலும் சிறப்பு தேவை உள்ள மாணவர்களுக்கான வசதிகளைப் பெருக்குதல் அவசியம்.
  • பள்ளிகளில் உயர்நிலை வகுப்பு பயில இயலாதவர்களுக்காக திறந்தநிலை மற்றும் தொலைதூரக்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் அவசியம் இது பள்ளியில் பெற்ற கல்வியை முழுமைப்படுத்தவும் மேம்படுத்தவும் பயன்படும். மேலும் இது பள்ளியில் சேரத் தவறியவர்களுக்கு கல்வி அளிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.
நிர்வாக சீர்திருத்தங்கள் & ஆதாரம் நிறுவங்களை வலுபடுத்துதல்
  • மத்திய அரசின் நிதியுதவியைப் பெற ஒவ்வொரு மாநிலத்திலும் நிர்வாகச் சீர்திருத்தம் அவசியமாக்கப் படவேண்டும். நிர்வாக சீர்திருத்தங்களைக் கீழே காணலாம்.,
  • பள்ளி நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் - நிர்வாகம் மற்றும் பொறுப்புகளைப் பரவலாக்கி பள்ளிகளின் திறனை மேம்படுத்த வேண்டும்.
  • ஆசிரியர் தேர்வு, அவர்களைப் பணியமர்த்துதல், பயிற்சி அளித்தல்,ஊதியம் மற்றும் பணி உயர்வு ஆகியவற்றில் தெளிவான மற்றும் வெளிப்படையான கொள்கைகளை கடைபிடித்தல்.
  • புதுமைப்படுத்தல்/கணிணி நிர்வாகம் மற்றும் அதிகாரப் பரவலாக்குதல் உள்ளிட்ட கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
  • உயர்கல்வி அமைப்பின் அனைத்து மட்டத்திலும் தொழில்சார்ந்த மற்றும் கல்வி உள்ளீடுகளை அளிக்கவேண்டும். அதாவது இது பள்ளி அளவில் இருந்து தொடங்கவேண்டும்.
  • விரைவில் நிதி ஆதாரத்தினைப் பெறவும் அதனை உரிய வழிகளில் செலவழிக்கவும் நிதி கையாளும் வழிமுறைகளை செம்மைப்படுத்த வேண்டும்.
  • பல்வேறு மட்டங்களில் ஆதார நிறுவனங்களை வலுபடுத்துதல் அவசியம். சான்றாக,,
    • தேசிய அளவில் – (என்சிஇஆர்டி (NCERT) (ஆர்ஐஈ உட்பட), என்யூஇபிஏ & என்இஓஎஸ்)
    • மாநில அளவில் – எஸ்சிஆர்டி, மாநில திறந்தநிலைப் பள்ளிகள் & எஸ்ஐஇஎம்ஏடி (SIEMATs),
    • பல்கலைக்கழகங்களின் கல்வியியல் துறை,புகழ்பெற்ற கலை,அறிவியல் & சமூக அறிவியல் கல்லூரிகள்,ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் மூலம் நிதியுதவி பெறும் கல்வியியல் நிறுவனங்கள்.

பஞ்சாயத்துகளின் ஈடுபாடு

திட்டமிடல், செயலாக்கம், கண்காணித்தல மற்றும் மதிப்பிடுதல் முதலியவற்றில் பஞ்சாயத்துராஜ் அமைப்புகள்,உள்ளாட்சி அமைப்புகள்,பெற்றோர்கள்,ஆசிரியர்கள் சமுதாயம் மற்றும் பள்ளி நிர்வாகக் குழு , பெற்றோர்-ஆசிரியர் கழகம் உள்ளிட்ட இதர பங்குதாரர்களின் பங்களிப்பு உறுதி செய்யப்படும்.
மத்திய அரசு உதவிபெறும் 4 திட்டங்கள்:
மத்திய அரசு நிதி உதவிபெறும் 4 திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்துகிறது.
  1. ஐசிடி (தகவல் தொடர்பு தொழில்நுட்பம்) உயர்நிலை & மேல்நிலை வகுப்புகளில் கணிணிக் கல்வி மற்றும் கணிப்பொறி வழிக் கல்வி அளிக்க மாநிலங்களுக்கு நிதி உதவி அளிக்கிறது.
  2. உடலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குகான ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் (IEDC) தன்னார்வ அமைப்புகள் & மாநில அரசுகளுக்கு இக்குழந்தைகளின் கல்வியை மேம்படுத்த நிதி அளிக்கிறது.
  3. உயர்நிலை & மேல்நிலை வகுப்பு மாணவிகளுக்கு உணவு மற்றும் விடுதிகளை மேம்படுத்துதல். கிராமப்புறங்களில் விடுதிகளை நடத்த தன்னார்வ அமைப்புகளுக்கு நிதி உதவி.
  4. பள்ளிகளின் தரம் உயர்த்துதல் யோகா பயிற்சி,அறிவியல் கல்வி, சுற்றுச்சூழல் & மக்கள்தொகைக் கல்வி மற்றும் சர்வதேச அறிவியல் ஒலிம்பியட் முதலியவற்றை மேம்படுத்தல்.
  5. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் படிக்கும்போதே வருவாய் ஈட்ட ஏதுவாக அவர்களை சுயதொழிலுக்கோ அல்லது பகுதிநேர வேலைவாய்ப்பிற்கோ தயார்படுத்த வேண்டும். மாநில/யூனியன் பிரதேச அரசுகள் மாவட்ட/ஒன்றிய அளவில் தொழிற்பயிற்சி மையங்களை ஏற்படுத்த வேண்டும்.
கேந்த்ரிய வித்யாலயா மற்றும் ஜவஹர் நவோதய வித்யாலயா.
கேந்த்ரிய வித்யாலயா மற்றும் ஜவஹர் நவோதய வித்யாலயா பள்ளிகளின் பங்களிப்பை அதிகரிக்கும் பொருட்டு அதன் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

நிதிபங்களிப்புத் திட்டம் மற்றும் வங்கிக் கணக்கு பெறுதல்


  • 11 ஆவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் வடகிழக்கு மாநிலங்கள் நீங்கலாக பிற மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு திட்டங்களின் அனைத்துப் பிரிவுகளையும் செயல்படுத்த மொத்த திட்டமதிப்பீட்டில் 75% தொகையை மத்திய அரசு அளிக்கிறது. வடகிழக்கு மாநிலங்களுக்கு 90% நிதி அளிக்கப்படுகிறது.(மத்திய மாநில பங்களிப்பு உள்ள அனைத்து திட்டங்களிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படும்)
  • 11 ஆவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் திட்டங்களின் அனைத்துப் பிரிவுகளையும் செயல்படுத்த மொத்த திட்டமதிப்பீட்டில் 25% தொகையை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஏற்க வேண்டும். வடகிழக்கு மாநிலங்கள் 10% தொகையை ஏற்க வேண்டும்.(மத்திய மாநில பங்களிப்பு உள்ள அனைத்து திட்டங்களிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படும்)
  • நடைமுறையில் உள்ள சர்வ சிக்ஸா அபியான் திட்டத்தின் மூலம் நிதியினை பயன்படுத்தவும் பரிமாற்றம் செய்யவும் முழுமையான நிதி மேலாண்மை அமைப்பை மாநில அரசு உருவாக்கும். நிதி எங்கு எவ்வாறு செலவழிக்கப்பட்டது என்பதை எளிதில் அறியும் வண்ணம் வெளிப்படையாகவும் திறன்வாய்ந்ததாகவும் அமைக்கப்படும்.
  • இத்திட்ட நிதியை நிர்வகிக்க மாநில, மாவட்ட மற்றும் பள்ளி அளவில் தனித்தனி வங்கிக் கணக்குகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உருவாக்கப்படும். பள்ளி அளவில் தலைமையாசிரியரும் மற்றும் உதவி தலைமையாசிரியரும் இணைந்து வங்கி கணக்கு பெறுவர். மாவட்ட அளவில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் வங்கிக் கணக்கினை நிர்வகிப்பார்.
  • 12 ஆவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் மத்திய மாநில அரசுகளின் நிதிப்பகிர்வு திட்டம் 50:50 என்று மாறும். வடகிழக்கு மாநிலங்களுக்கு இது 11 மற்றும் 12ஆவது ஐந்தாண்டு திட்ட காலத்திலும் 90:10 என்ற விகிதத்திலேயே இருக்கும்.

No comments:

Post a Comment